Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 ஜூன் (ஹி.ச.)
டெல்லியில் நடைபெற்ற “ஜனசேனா பிரஸ்தானம் – தேசிய ஒருமைப்பாட்டிற்காக” என்ற சிறப்பு மாநாட்டில் பவன் கல்யாண் பங்கேற்றார்.
நிகழ்வில் அவர் பேசியதாவது,
கட்சி தொடங்கிய 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில் பேசிய அவர், தாம் அரசியல் கட்சியை அதிகாரம் பெறுவதற்காக தொடங்கவில்லை என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் நோக்கமே முக்கிய இலக்கு என்றும் தெரிவித்தார்.
மேலும் கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களையும், மக்கள் இயக்கங்களையும் நடத்தியதாக நினைவுகூர்ந்தார்.
சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் நலனுக்காக நாட்டின் ஒருமைப்பாட்டையே பந்தயமாக வைப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
டெல்லிக்கு வந்து மெடுகள் வளைப்போம் என்று கூறுவோர், இங்கு வந்ததும் மௌனமாகிவிடுகிறார்கள் எனவும் அவர் விமர்சித்தார்.
தெலுங்கானா மாநில உருவாக்கம் குறித்து தன் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்திய அவர், தாம் தெலுங்கானா உருவாக்கத்தை ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும், ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்ட விதம் குறித்தே தாம் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறினார்.
பிரிவினைக்குப் பிறகு இரு மாநிலங்களுக்கிடையே இன்னும் பல பிரச்சினைகள், குறிப்பாக சொத்து பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெல்லி என்பது இந்திய அரசியலமைப்பு உருவான இடமாக இருப்பதால், தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசுவதற்கு இது சரியான மேடை எனவும் பவன் கல்யாண் குறிப்பிட்டார்.
ஜனசேனா பார்ட்டி சார்பில் நடைபெற்ற இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA