Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 ஜூன் (ஹி.ச.)
சர்வதேச சந்தையில் விமான எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக சில விமான சேவைகளை ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தற்காலிகமாக குறைத்துள்ளன.
குறிப்பாக பயணிகள் வரத்து குறைவாக உள்ள சில வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதால், செயல்பாட்டு செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் சில பயணிகள் மாற்று நேர விமானங்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், முக்கிய நகரங்களுக்கு இடையேயான அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளுக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் விமான எரிபொருள் விலை சீராகும் பட்சத்தில், தற்போது குறைக்கப்பட்டுள்ள சேவைகள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, விமான கட்டணங்களும் உயரக்கூடும் என்ற அச்சம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P