ஜபில் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை திறப்பு விழா- மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்பு
புனே, 17 ஜூன் (ஹி.ச) புனேவில் இன்று நடைபெற்ற ஜபில் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை திறப்பு விழாவில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸுடன் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பே
Union Minister Ashwini Vaishnaw participates in the inauguration of Jabil India Private Limited's manufacturing plant.


புனே, 17 ஜூன் (ஹி.ச)

புனேவில் இன்று நடைபெற்ற ஜபில் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை திறப்பு விழாவில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸுடன் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில்,

இந்தியா கட்டுப்பாடுகள் நிறைந்த பொருளாதார அமைப்பிலிருந்து சீர்திருத்தங்களை மையமாகக் கொண்ட அமைப்பாக மாறியுள்ளது.

1950களில் அரசாங்கத்தில் சோசலிச, இடதுசாரி சிந்தனை நிலவியது. அனைத்தும் உள்ளூர், மாநில அல்லது மத்திய அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை இருந்தது. இது இந்தியப் பொருளாதாரத்தில், குறிப்பாக உற்பத்தித் துறையில் பெரும் தடைகளை உருவாக்கியது.

தற்போது மிகப்பெரிய நில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதில் தேவேந்திர ஃபட்னவிஸ் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ்,

பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் AI தரவு மையங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்வது முக்கியத்துவம் பெறுகிறது.

AI தரவு மையங்கள் உலகளவில் மிகப்பெரிய வளர்ச்சி இயந்திரமாக மாறியுள்ளன. AI தரவு மையங்களின் முக்கிய மின்னணு உதிரிபாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது மிகவும் அவசியம். இது பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய அம்சம். ஜபில் நிறுவனம் இங்கு புனேவில் தரவு மைய உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும். இந்த ஆலை மிகவும் நவீன, மேம்பட்ட, உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் சிறந்த உற்பத்தித் திறன் கொண்டது.

பிரதமர் கடைப்பிடித்த வெளியுறவுக் கொள்கை, இந்தியாவை உலகளவில் நம்பகமான கூட்டாளியாக நிலைநிறுத்தியுள்ளது. அதனால்தான் இந்தியா உலக அளவில், குறிப்பாக மின்னணுத் துறையில், விருப்பமான இடமாகக் கருதப்படுகிறது.

புனேவில் ரயில்வே திறனை இரட்டிப்பாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை ஏராளமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆலந்தியில் ஒரு மெகா முனையம் கட்டப்பட்டு வருகிறது.

புனே சந்திப்பில் ஆறு புதிய நடைமேடைகள் அமைக்கப்படும். மேலும், மும்பை - புனே இடையே புதிய புல்லட் ரயிலுக்கான திட்டமும் இந்த பட்ஜெட்டில் ஒப்புதல் பெற்றது. மும்பை-அகமதாபாத் வழித்தடத்தின் முதல் பகுதி அடுத்த ஆண்டு திறக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b