Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா ,18 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச இடைநிலை பொதுத் துணைத் தேர்வுகள் (IPASE-2026) முடிவுகள் வெளியிடப்பட்டன.
மாணவர்கள் தங்களின் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் “மனமித்ரா” சேவை மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேச கல்வித் துறை அமைச்சர் நாரா லோகேஷ் மாணவர்களுக்கு தனது அறிக்கையில் வாழ்த்துகளை தெரிவித்தார்.
தேர்வில் வெற்றி பெற்றவர்களையும், இம்ப்ரூவ்மென்ட் தேர்வுகள் மூலம் தங்களின் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொண்டவர்களையும் அவர் பாராட்டினார்.
மாணவர்களின் உழைப்பும், முயற்சியும் பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார்.
முதல் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு முடிவுகளில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளனர்.
மொத்தமாக 1.83 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொண்டுள்ளனர்.
மேலும், சாதாரண தேர்வுகளில் தேர்ச்சி பெறாத சுமார் 1 லட்சம் மாணவர்கள் சப்பிளிமென்டரி தேர்வின் மூலம் வெற்றி பெற்று, மேல்படிப்புக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
அரசு வழங்கிய இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளதாகவும், தொடர்ந்து உயர்கல்வியை நோக்கி முன்னேற வேண்டும் எனவும் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA