Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
மூத்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஆர். நல்லகண்ணு, பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. சௌத்ரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. ராஜன் உள்ளிட்டோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
அவையின் முதல் நாளான இன்று, மறைந்த தலைவர்களின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து உறுப்பினர்கள் உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அவையினர் சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இதனிடையே, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஜூன் 23-ஆம் தேதி வரை 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கூட்டத்தொடரின் கால அளவு குறைவாக இருப்பதால், இந்த 3 நாட்களிலும் கேள்வி-பதில் நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று ஜூன் 19, ஜூன் 22 மற்றும் ஜூன் 23 ஆகிய தேதிகளில் மட்டுமே அவை நடைபெறும்.
இரங்கல் தீர்மானத்தைத் தொடர்ந்து அரசின் அவசர சட்டமுன்வடிவுகள் மற்றும் முக்கிய அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b