Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 19 ஜூன் (ஹி.ச.)
மகாராஷ்டிரா அரசியலில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டை கொலை வழக்கு மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2006ஆம் ஆண்டு நவி மும்பை பகுதியில் காங்கிரஸ் தலைவர் பவன் ராஜே நிம்பால்கர் மற்றும் அவரது ஓட்டுநர் சமத் காஜி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், மும்பை சிறப்பு CBI நீதிமன்றம் நாளை (ஜூன் 20) இறுதி தீர்ப்பை வழங்க உள்ளது.
இந்த முக்கிய தீர்ப்பு வரும் நேரத்திலேயே, மாநில அரசியலில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) அணிக்குள் உள்ள மக்களவை உறுப்பினர்களை பிரித்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் இணைக்க “ஆபரேஷன் டைகர்” என்ற பெயரில் ரகசிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை சிவசேனா (UBT) மூத்த தலைவர் ஒருவர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் கீழ் சில எம்.பி.க்களுக்கு பெரும் தொகை பணம் வழங்கி, அவர்களுக்கு எதிரான வழக்குகளில் நிவாரணம் அளிப்பதாகவும், இதன் மூலம் கட்சி மாற வற்புறுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த திட்டத்தில் மொத்தம் ஆறு எம்.பி.க்களை குறிவைத்துள்ளதாகவும், அவர்களில் சிலர் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், கட்சி மாறும் லேட்டரில் கையெழுத்திட வேண்டிய நிலையில் சில எம்.பி.க்கள் பின்வாங்கியதால் இந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த இரட்டை கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர், “நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக நீதிக்காக போராடி வருகிறோம்.
நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. தீர்ப்பு வந்த பிறகே எனது அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
இதனால், பழைய கொலை வழக்கின் தீர்ப்பு மற்றும் அதனுடன் இணைந்த அரசியல் மாறுபாடுகள் மகாராஷ்டிரா அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA