ராகுல் காந்திக்கு ரேவந்த் ரெட்டி பிறந்தநாள் வாழ்த்து
ஹைதராபாத் , 19 ஜூன் (ஹி.ச.) காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அழைப்பின் பேரில் ப
A


ஹைதராபாத் , 19 ஜூன் (ஹி.ச.)

காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அழைப்பின் பேரில் பல்வேறு மாநிலங்களில் பிறந்தநாள் விழாக்கள் மற்றும் சமூக நலப் பணிகள் நடைபெற்றன.

ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில், தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தனது சமூக வலைதள பதிவில்,

ராகுல் காந்தி எப்போதும் தங்களுக்கு ஊக்கமளிக்கும் தலைவராக இருப்பதாக குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பதிலும், சமூக நீதியை நிலைநாட்டுவதிலும், மக்கள் நலனுக்காக பாடுபடுவதிலும் ராகுல் காந்தி காட்டி வரும் அர்ப்பணிப்பு கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகமாக இருப்பதாகவும் அவர் கூறினார். நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்றி வருகிற ராகுல் காந்தி நல்ல உடல்நலத்துடனும், உற்சாகத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

இதற்கிடையில், தெலங்கானா முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்கள் மற்றும் தொகுதி மையங்களில் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடி, இனிப்புகள் வழங்கினர்.

மேலும், ஏழை மக்களுக்கு அன்னதானம், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA