Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 02 ஜூன் (ஹி.ச.)
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்பி மாணிக்கம் தாகூரின் பிறந்த நாள் விழா மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் கலந்து கொண்டு நேரில் வாழ்த்து தெரிவித்தவுடன் 17 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசும் போது கூறியதாவது,
தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அறுபது ஆண்டுகளுக்கு பிறகு இடம் பெற்றுள்ளது என்று எல்லோரும் சொல்கிறார்கள். 1957-இல் கக்கன் முதல் முதலமைச்சரானார். 1967ல் காங்கிரஸ் தனது ஆட்சியை இழந்தது.
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காங்கிரஸ் பேர் இயக்கம் தமிழகத்தில் கூட்டணி மந்திர சபையில் அமர்ந்திருக்கிறது என்றால் அதற்கு ஒருவர் காரணம் என் அன்புக்குரிய நண்பர் நாம் அன்புக்குரிய தலைவர் ராகுல் காந்தியின் உயிர் நண்பர் மாணிக்கம் தாகூர்.
அவரது இந்த பிறந்த நாளை தமிழகம் முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்பது எனது ஆசை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b