Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 20 ஜூன் (ஹி.ச.)
மும்பையில் இருந்து கோவைக்கு கடத்திய ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இரண்டு பேரை கைது செய்தனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை புட்டுவிக்கி சாலை கரும்புக்கடை போலீசார் ரோந்து மேற்கொண்ட போது அங்கு உள்ள கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் சூலூரைச் சேர்ந்த சந்தோஷ், மதுக்கரை சேர்ந்த சந்தான்குமார் என்பதும் போதை மாத்திரைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.
அத்துடன் அவர்களிடம் இருந்து 1,448 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் அந்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான சந்தோஷ், சந்தான் குமார் ஆகிய இரண்டு பேரும் தேங்காய் உரிக்கும் வேலைக்குச் சென்று வருகிறார்கள். இதில் சந்தான்குமாரின் பூர்வீக மத்திய பிரதேசம் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்கள் மும்பையில் தனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி கோவையில் கடத்தி வந்து விற்பனை செய்தது தொடங்கி உள்ளதாகவும், அதன்படி ஒரு மாத்திரையை ரூபாய் 30 க்கு வாங்கி, ரூபாயும் 350 வரையும், அதை போதை ஊசியாக ஒரு ஊசி கிருபை 1,500 வரையும் விற்பனை செய்து உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b