Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா , 20 ஜூன் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலம்,ஜெயசங்கர் பூபால பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்கரேணி கெடிகே-5 சுரங்கத்தை “பாயிபாட” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக
முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின்
ஒய்.எஸ்.ஆர் கவிதா
பார்வையிட்டார்.
பின்னர் அவர் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்,
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
தெலுங்கானா மாநிலம் சிங்கரேணி நிறுவனத்தில் மருத்துவத் தகுதி இல்லாத காரணத்தால் நிலுவையில் உள்ள சுமார் 1200 தொழிலாளர் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்.
இதனை நிறைவேற்றாவிட்டால் ஜூலை 20 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன்.
சிங்கரேணியில் எந்தப் பணியும் நடைபெற வேண்டுமானாலும் துணை முதல்வர் அலுவலகத்திலிருந்து லஞ்சம் கேட்கப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் லாபத்தில் இருந்த சிங்கரேணி தற்போது நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு தொழிலாளருக்கு ஏற்பட்ட காயத்திற்கு தரமற்ற டிடோனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டதே காரணம்.
சுரங்கத் தொழிலாளர்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட முறையாக வழங்கப்படவில்லை.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் வீட்டு கனவை நிறைவேற்ற தனியாக ‘ஹவுசிங் போர்டு’ அமைக்க வேண்டும்.
வீடு கட்ட ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், விஜிலன்ஸ் விசாரணை பெயரில் தொழிலாளர்களை அச்சுறுத்தக் கூடாது.
தனது கோரிக்கைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்படாவிட்டால் ஜூலை 20 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA