Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம், 21 ஜூன் (ஹி.ச.)
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சமூக வலைதளத்தில் பவன் கல்யாண் வெளியிட்ட பதிவில்
அவர் தெரிவித்துள்ளதாவது,
யோகா இந்திய நாகரிகத்தின் அங்கமாகவும், உலகிற்கு இந்தியா வழங்கிய முக்கிய பரிசாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். உடல் ஆரோக்கியம், மன தெளிவு மற்றும் உள்ளார்ந்த சமநிலையை யோகா வளர்க்கிறது.
அனைவரும் அதை வாழ்க்கை முறையாக ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறுவயதிலேயே யோகா பயணத்தைத் தொடங்கியதாக கூறிய பவன் கல்யாண், யோகா தனது சிந்தனைகளுக்கு தெளிவையும் வாழ்க்கை பாதைக்கு திசையையும் வழங்கியதாக தெரிவித்தார்.
தற்போது தனது தினசரி வாழ்க்கையில் கிரியா யோகா, அஷ்டாங்க யோகா மற்றும் சுதர்சன கிரியா உள்ளிட்ட பயிற்சிகள் தொடர்வதாகவும் கூறினார்.
யோகாவுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க காரணமான நரேந்திர மோடி
அவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையில், விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு யோகாசனங்களில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA