ஹைதராபாத் மெட்ரோ நிலுவை பிரச்சனை – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கடிதம்
ஹைதராபாத் , 21 ஜூன் (ஹி.ச.) ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சனைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்
A


ஹைதராபாத் , 21 ஜூன் (ஹி.ச.)

ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சனைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் விரைவில் ஒரு முக்கிய கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தாம் நாளை ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நேரில் சந்திப்பில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்திற்கான இந்திய ரயில்வே நிதி கழகம் (IRFC) நிதி விடுவிப்பு மற்றும் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்கு தேவையான அனுமதிகள் ஆகியவை முக்கியமாக தீர்க்கப்பட வேண்டிய விஷயங்களாக உள்ளன என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத் நகரின் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்துவது அவசியம் எனவும், நிலுவை பிரச்சனைகளுக்கு விரைவான மற்றும் சாதகமான தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA