Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 21 ஜூன் (ஹி.ச.)
கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஆட்சிய உரையில் பேசியதாவது,
யோகாவை ஏற்றுக்கொண்டால், சமூகம் ஆரோக்கியமாக இருக்கும், நாடும் அதிக செயல்திறன் மிக்கதாகவும் செழிப்பாகவும் இருக்கும். 100 நாள் இணையவழி யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இதில் 130 நாடுகளில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம், வரலாற்றுத் தலங்கள் மற்றும் யோகா மரபுகளை ஒருங்கிணைக்கும் வகையில், நாடு முழுவதும் 100 மதிப்புமிக்க இடங்களில் கலாச்சார அமைச்சகம் சிறப்பு யோகா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த முன்னெடுப்பின் கீழ், புது தில்லியில் உள்ள செங்கோட்டை, உத்தரகாண்டில் உள்ள ஹரித்வார், ஒடிசாவில் உள்ள கோனார்க், கர்நாடகாவில் உள்ள ஹம்பி, தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரம், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, பீகாரில் உள்ள நாலந்தா, குஜராத்தில் உள்ள அகமதாபாத், உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத், லடாக்கில் உள்ள லே, தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் மற்றும் அசாமில் உள்ள சில்சார் உள்ளிட்ட பன்னிரண்டு புகழ்பெற்ற இடங்களில் பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறும்.
யோகா பாரம்பரியத்தை உலகிற்குப் பரப்பிய வங்காளத்தின் உலகப் புனிதர்களான ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் மற்றும் லஹிரி மகாசயா போன்ற மாபெரும் ஆளுமைகளுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.
யோகாவை ஒரு தினசரி வழக்கமாக்குங்கள்: யோகாவை ஆண்டின் ஒரு நாளுக்கோ அல்லது ஒரு நிகழ்வுக்கோ மட்டும் சுருக்கிக் கொள்ளக்கூடாது.
குடிமக்கள் யோகாவைத் தங்களின் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்ள வேண்டும். வழக்கமான பயிற்சியின் மூலமே யோகாவின் முழுப் பலன்களையும் பெற முடியும் என்று மோடி வலியுறுத்தினார்.
வயதுக்கு ஏற்ற ஆற்றல் அதிகரிப்பு:
நமக்கு 40 வயதாகும்போது, 20 வயதில் இருந்ததை விட நமது உடல் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும். 30 வயதில் இருந்ததை விட 50 வயதில் நாம் வலிமையாக இருக்க வேண்டும்.
இன்றைய நவீன வாழ்க்கை முறை நோய்களை எதிர்த்துப் போராட யோகா உதவும் என்று பிரதமர் கூறினார்.
யோகா அனைவரையும் ஒன்றிணைக்கிறது. நாடு முழுவதும் யோகா அலை: இன்று, இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரை, கிழக்கு இந்தியா முதல் மேற்கு இந்தியா வரை, நாடு முழுவதும் யோகாவின் சக்தி பொங்கி வழிகிறது.
யோகா எல்லைகளையும் வேறுபாடுகளையும் கடந்து, உலகெங்கிலும் உள்ள மக்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவருகிறது என்று கூறிய பிரதமர் மோடி, உலகெங்கிலும் உள்ள யோகா பிரியர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV