Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூர், 22 ஜூன் (ஹி.ச.)
கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘சங்கல்ப சமாவேஷா’
(Sankalpa Samavesha) நிகழ்ச்சியில்,
முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு ஆதரவாக சில தொண்டர்கள் தொடர்ந்து “டி.கே., டி.கே.”
என முழக்கமிட்டதால் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடும் அதிருப்தி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய கார்கே,
இங்கே கத்தினால் நாடு முழுவதும் ஏதாவது மாறிவிடுமா? இது ஒரே ஒருவருக்கான நிகழ்ச்சி அல்ல.
கட்சிக்கான நிகழ்ச்சி என்று கண்டித்தார்.
மேலும் முழக்கமிட்டவர்களை “பயனற்றவர்கள்” எனக் குறிப்பிட்டு, கட்சி ஒழுக்கத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
நிகழ்ச்சியின் போது மேடையில் இருந்த கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூட எழுந்து நின்று தொண்டர்களை அமைதியாக இருக்குமாறு சைகை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியில் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது என்றும், முழக்கமிட்டவர்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கார்கே தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P