காவிரி நதிநீர் விவகாரம் - புதிய ஆணையம் அமைக்க பாமக கடும் எதிர்ப்பு
சென்னை, 22 ஜூன் (ஹி.ச.) காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக புதிய ஆணையம் அமைக்கும் முயற்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், புதிய ஆணையம் அமைக்கப்படு
MK opposes formation of new commission


சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக புதிய ஆணையம் அமைக்கும் முயற்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், புதிய ஆணையம் அமைக்கப்படுவது தேவையற்ற சட்டரீதியான சிக்கல்களை உருவாக்கும் என்று எச்சரித்தார்.

ஏற்கனவே காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஆணைகளின்படி காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மற்றொரு புதிய ஆணையம் அமைப்பது, தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக அமையும் என்றும், நதிநீர் உரிமைகளை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கர்நாடக அரசு முன்னெடுத்து வரும் மேகதாது அணை திட்ட விவகாரத்தில் தமிழக அரசு எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது என்றும் கணேஷ்குமார் வலியுறுத்தினார்.

காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மேகதாது அணைக்கு தொடர்ந்து உறுதியான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய ஆணையம் அமைக்கும் முயற்சி என்பது காவிரி விவகாரத்தை மேலும் இழுத்தடித்து, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை தடுக்கும் முயற்சி என பாமக குற்றம்சாட்டியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b