இன்று முதல்வர் விஜய் பிறந்தநாள் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து
சென்னை, 22 ஜூன் (ஹி.ச.) முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று எக்ஸ் தளத்தில் அமைச்சர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில
Minister Aadav Arjuna extends wishes


சென்னை, 22 ஜூன் (ஹி.ச.)

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று எக்ஸ் தளத்தில் அமைச்சர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

மதிப்பிற்குரிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; மக்கள்தானே மன்னர்கள் என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!

இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது மக்கள் ஊழியனாக அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.

மக்களிடம் செல் என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.

உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b