Enter your Email Address to subscribe to our newsletters

வர்தன்னபேட்டை , 22 ஜூன் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வர்தன்னபேட்டை பகுதியில் நடைபெற்ற பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் முக்கிய செயல்வீரர்கள் கூட்டத்தில், கட்சியின் செயல்தலைவர் கே.டி. ராமராவ் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.
கூட்டத்தில் பேசிய அவர்,
தனது தந்தை கே. சந்திரசேகர் ராவ் போல தாம் மென்மையானவர் அல்ல என்றும், கட்சித் தொண்டர்களை தொந்தரவு செய்தவர்களை எவ்வித சூழ்நிலையிலும் விடமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், வந்த 5 ஆண்டுகளில் எதையும் மறக்கமாட்டோம். எங்களை தொந்தரவு செய்தவர்கள், எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டிப்பாக சந்திப்போம் என அவர் கூறினார்.
தங்களை எதிர்த்தவர்கள் எங்கு மறைந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும் தேடி கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA