சட்டப்பேரவையில் அமளி - முதலமைச்சர் பதிலுரையின் போது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) சென்னை கோட்டையில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். தனது உரையில், ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட
அமளி


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

சென்னை கோட்டையில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.

தனது உரையில், ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்ததுடன், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளையும் விமர்சித்தார்.

முதலமைச்சரின் பேச்சின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறுக்கிட்டு, அரசின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமளி நீடித்த நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே பல்வேறு விவகாரங்களை எழுப்பி வந்தன.

குறிப்பாக சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு சம்பவம் குறித்தும் அவையில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதுவும் ஆளும்-எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான மோதலை அதிகரித்த முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam