தென் ஆப்பிரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி- இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பில் சிக்கல்
லண்டன் , 23 ஜூன் (ஹி.ச.) மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ''ஏ'' பிரிவில் அரையிறுதிக்கான போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால், அரையிறுதி வாய்
A


லண்டன் , 23 ஜூன் (ஹி.ச.)

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 'ஏ' பிரிவில் அரையிறுதிக்கான போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததால், அரையிறுதி வாய்ப்புக்கான கணக்கு மேலும் சிக்கலடைந்துள்ளது.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

இருப்பினும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக பெற்ற அபார வெற்றிகள் காரணமாக +2.511 என்ற வலுவான நெட் ரன் ரேட்டை தக்கவைத்துள்ளது.

இந்திய அணி தனது மீதமுள்ள லீக் ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது.

இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.

ஆனால் ஒரு போட்டியில் தோல்வி ஏற்பட்டால், மற்ற அணிகளின் முடிவுகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் தகுதி வாய்ப்பு தீர்மானிக்கப்படும் நிலை உருவாகும்.

மறுபுறம், தென் ஆப்பிரிக்க அணி 4 புள்ளிகளுடன் இருந்தாலும், அதன் நெட் ரன் ரேட் -0.546 ஆக இருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த அந்த அணி, இந்தியாவை வீழ்த்திய வெற்றியின் மூலம் அரையிறுதி நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

நெதர்லாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான மீதமுள்ள போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவதுடன், நெட் ரன் ரேட்டை மேம்படுத்த பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.

இதனால் 'ஏ' பிரிவில் அரையிறுதி சுற்றுக்கான போட்டி கடும் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இந்திய அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA