Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 ஜூன் (ஹி.ச.)
மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகளைப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளின் ஆளுமைகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில்,
பத்ம பூஷண் விருது பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தொழில்முனைவோர் மற்றும் சமூக சேவகர் எஸ்.கே.எம். மயிலானந்தன், மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், பத்மஶ்ரீ விருது பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி மற்றும் காயத்ரி, மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம், வேளாண் விஞ்ஞானி டாக்டர் ராமசாமி, கால்நடை மருத்துவத்தில் பாரம்பரிய மூலிகை சிகிச்சைக்காக அறியப்படும் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன், நடிகர் ஆர். மாதவன், “இந்தியாவின் சக்தி மனிதர்” என அழைக்கப்படும் வீழிநாதன் காமகோடி மற்றும் சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் ஆகியோருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் மூலம் கௌரவிக்கப்பட்டுள்ள இந்த ஆளுமைகள் தங்களது துறைகளில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவதாகவும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P