Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி, 25 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தின் மக்கள் தலைநகரான அமராவதியில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் 112-வது திரைப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
வெலகபூடியில் நடைபெற்ற இந்த விழாவில், மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் கட்ட காட்சிக்கு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி கேமராவை இயக்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து,
இந் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் லோகேஷ்,
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு சிந்தனைகளுக்கு ஏற்ப ஆந்திரப் பிரதேசத்தில் திரைப்படத் துறையை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், திரைப்படத் துறையுடன் இணைந்து கிரியேட்டர் எகானமியையும் மேம்படுத்த தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
அமராவதியில் திரைப்பட தொடக்க விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் மேலும் பல திரைப்படங்கள் இங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தார்.
இந்த வாய்ப்பை வழங்கிய பாலகிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்த அவர்,
“ஜெய் பாலைய்யா” என்றும் வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பதிவுத்துறை அமைச்சர் கந்துலா துர்கேஷ், இயக்குநர் கோரட்டாலா சிவா, தயாரிப்பாளர்கள் சுரேஷ் பாபு, செருகூரி சுதாகர் உள்ளிட்ட திரைப்பட மற்றும் அரசியல் துறை பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அமராவதியில் இவ்வளவு பிரம்மாண்டமான திரைப்பட தொடக்க விழா நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA