இன்னும் 84 ரன்கள் - ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சஞ்சு சாம்சன்
டப்ளின், 25 ஜூன் (ஹி.ச.) அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், கேப்டன் ரோகித் சர்மாவின் முக்கிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப
A


டப்ளின், 25 ஜூன் (ஹி.ச.)

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், கேப்டன் ரோகித் சர்மாவின் முக்கிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிகள் வருகிற 26 மற்றும் 28-ந்தேதிகளில் டப்ளினில் நடைபெற உள்ளன.

இந்தியா-அயர்லாந்து இடையிலான டி20 போட்டிகள் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா தக்கவைத்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிராக 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 3 அரைசதங்கள் உள்பட 201 ரன்கள் குவித்துள்ளார்.

இதற்கிடையில், அயர்லாந்துக்கு எதிராக இதுவரை 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 59.00 சராசரியுடனும், 171.01 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டுடனும் 118 ரன்கள் எடுத்துள்ளார்.

இதனால், ரோகித் சர்மாவின் 201 ரன்கள் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 84 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்த தொடரில் சஞ்சு சாம்சன் 84 ரன்களை கடந்துவிட்டால், இந்தியா-அயர்லாந்து டி20 போட்டிகள் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை தனது பெயரில் பதிவு செய்வார்.

எனவே, இந்த தொடரில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரோகித்தின் சாதனையை அவர் முறியடித்து புதிய வரலாறு படைப்பாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA