Enter your Email Address to subscribe to our newsletters

சத்துப்பள்ளி , 25 ஜூன் (ஹி.ச.)
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் பத்திரிகையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி. ராமராவ் குற்றம்சாட்டினார்.
சத்துப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்,
கிராம மற்றும் மண்டல அளவில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதில்லை என்று கூறினார்.
பத்திரிகையாளர்களுக்கான சுகாதார அட்டைகள், வீட்டு மனை ஒதுக்கீடு உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தகுதியுடைய அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் புதிய அங்கீகார அட்டைகளை அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவித்த 6 உத்தரவாதங்கள் மற்றும் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் விமர்சித்தார்.
விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அது முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் செயல்பாட்டில் இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், மெகா டி.எஸ்.சி. மற்றும் வேலைவாய்ப்பு காலண்டர் வழங்கப்படும் என கூறி ஏமாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றும், மின்வெட்டு மற்றும் பாசன நீர் பிரச்சினைகளால் மக்கள் மீண்டும் கே.சி.ஆர்.
தலைமையிலான ஆட்சியை விரும்புகின்றனர் என்றும் கே.டி.ஆர் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA