Enter your Email Address to subscribe to our newsletters

மங்களகிரி , 27 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்று மங்களகிரியில் உள்ள சிகே கன்வென்ஷன் ஹாலில் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் தகவல் சேகரிப்பு குழுக்கள் மற்றும் 25 நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் பவன் கல்யாண் ஒவ்வொரு குழுவுடனும் தனித்தனியாக சந்தித்து, கட்சியின் களநிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.
மாநிலம் முழுவதும் உள்ள கட்சி குழுக்களின் செயல்பாடு, அடிப்படை நிலை பிரச்சனைகள், மற்றும் தொண்டர்களின் செயல்திறன் குறித்து நேரடியாக மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் நிலவும் உள்ளூர் அரசியல் சூழ்நிலை, கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி (TDP), பாஜக தலைவர்களுடன் ஜனசேனா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருங்கிணைப்பு நிலை ஆகியவை தொடர்பாகவும் அவர் கருத்துகளை கேட்டறிகிறார்.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களை முன்னிட்டு, கட்சியை அடித்தள மட்டத்திலிருந்து வலுப்படுத்தும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தலில் 100 சதவீத வெற்றி விகிதத்துடன் வரலாற்று வெற்றியை பெற்ற ஜனசேனா, தற்போது அமைப்பு வலுப்படுத்தும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA