மனமித்ரா மூலம் வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கும் வசதி – சேவைகள் எளிமைப்படுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு
அமராவதி , 29 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் அரசு சேவைகளை மக்களுக்கு மேலும் எளிதாக்கும் நோக்கில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் வேகத்தை அதிகரிக்க முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு உயர் மட்ட ஆலோ
A


அமராவதி , 29 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் அரசு சேவைகளை மக்களுக்கு மேலும் எளிதாக்கும் நோக்கில் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் வேகத்தை அதிகரிக்க முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

அரசின் சேவைகள் மற்றும் புகார் தீர்வு முறையை மேலும் வலுப்படுத்த “மனமித்ரா” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் வாட்ஸ்அப் வழியாக தங்கள் புகார்களை அனுப்பலாம்.

எழுத்து செய்திகளுடன் குரல் செய்தி (Voice Message) மூலமாகவும் புகார்கள் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு பெறப்படும் புகார்கள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் குறைகளைத் தீர்க்கும் பொது புகார் மேலாண்மை அமைப்பு (PGRS) மேலும் செயல்பாடுடன் இயங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதிகாரிகள் மக்கள் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து தீர்க்கும் வகையில் களப்பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, செயலாளர்கள் மாதத்திற்கு 3 நாட்கள், துறைத் தலைவர்கள் 6 நாட்கள், மாவட்ட ஆட்சியர்கள் 8 நாட்கள் களத்தில் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் 3,000 இடங்களில் மொபைல் நெட்வொர்க் சிக்னல் பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவற்றை மூன்று மாதங்களுக்குள் தீர்க்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யும் “நவசேதன” திட்டம் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 33,949 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமராவதியில் உள்ள மாநில செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், உயரதிகாரிகள் மற்றும் தொழில் துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA