துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான வழக்கு- ஜூலை 29-ஆம் தேதி இறுதி விசாரணை
தமிழ்நாடு, 29 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 29-ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின் மூலம
சென்னை உயர்நீதிமன்றம்


தமிழ்நாடு, 29 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 29-ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது.

தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின் மூலம், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கை ஜூலை 29-ஆம் தேதி இறுதி விசாரணைக்கு பட்டியலிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அதுவரை தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை தொடரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு, மாநில அரசு–ஆளுநர் இடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam