Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
சென்னை மாவட்ட அளவில் தேசிய தொழில் பழகுநர் முகாம் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
தொழில் பயிற்சி நிறுவனங்களான ஐடிஐ-யில் பயின்றவர்கள் மற்றும்
8, 10, 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இந்த முகாமில் தொழில் பழகுநர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்த முகாம், பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கும் ஐடிஐ பட்டயதாரர்களுக்கும் தொழில் நிறுவனங்களில் நேரடி பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்குகிறது.
தேர்வாகும் பழகுநர்களுக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்த பின்னர் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுவதால், வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் வருகை தர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளன.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b