Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 03 ஜூன் (ஹி.ச.)
மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சிக்குள் உள்கட்சி குழப்பம் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் கட்சி பிளவுபடும் வாய்ப்பு இருப்பதாகவும், “மஹாராஷ்டிரா சிவசேனா போலவே நிலைமை உருவாகலாம்” எனவும் சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூட்டிய முக்கிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், 80 பேரில் சுமார் 20 பேர் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இரண்டு எம்.எல்.ஏ.க்களை TMC கட்சி நீக்கியுள்ளது. இதையடுத்து, சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிப்பதாகவும், சுமார் 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை திரட்டும் முயற்சி நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், முன்னாள் TMC தலைவர் மற்றும் தற்போது பாஜக தரப்பில் உள்ள சில தலைவர்கள், “கட்சிக்குள் உள்கட்சி சண்டைகள் அதிகரித்து வருகிறது; பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மம்தா பானர்ஜி இதுகுறித்து கடுமையாக பதிலளித்துள்ளார்.
கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.
நாங்கள் அதனை எதிர்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பு நிலவுகிறது.
கட்சியின் அடுத்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA