பொலிவியா அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் - பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகல்
பொலிவியா, 03 ஜூன் (ஹி.ச.) பொலிவியாவின் முக்கிய நகரங்களின் சாலைகளை முடக்கிய ஒரு மாத கால அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மார்செலோ சலினாஸ் பதவி விலகியுள்ளார். இது மத்தியவாத ஜனாதிபதி ரோட்ரிகோ பாஸ் தலைமைய
Protests Against Bolivian Government Intensify


பொலிவியா, 03 ஜூன் (ஹி.ச.)

பொலிவியாவின் முக்கிய நகரங்களின் சாலைகளை முடக்கிய ஒரு மாத கால அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மார்செலோ சலினாஸ் பதவி விலகியுள்ளார்.

இது மத்தியவாத ஜனாதிபதி ரோட்ரிகோ பாஸ் தலைமையிலான அரசில் ஏற்பட்டுள்ள மிக உயர்மட்ட பதவி விலகலாகும். ஜனாதிபதி பாஸ் தானும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.

பாஸ் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் நவம்பர் மாதம் பதவியேற்றார். தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னாள் இடதுசாரி ஜனாதிபதி ஈவோ மோரல்ஸுக்கு விசுவாசமான அமைப்புகள் உட்பட போராட்டக்காரர்கள், பாஸ் அரசு சிக்கன நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கையாள வேண்டும் என்றும் கோருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள துணை அமைச்சர் எர்னெஸ்டோ ஜஸ்டினியானோ, தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் மார்செலோ சாலினாஸுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜஸ்டினியானோ 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் போதைப்பொருள் தடுப்புத் தலைவராகப் பணியாற்றியவர்.

இது குறித்து ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. மே மாதம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துடன் தொடங்கிய இந்த மோதல், நெடுஞ்சாலை முற்றுகைகளாக விரிவடைந்தது. இதனால் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கும் அண்டை நகரங்களான லா பாஸ் மற்றும் எல் ஆல்டோவுக்கான அணுகல் துண்டிக்கப்பட்டது.

போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மே மாத இறுதியில் அமைச்சரவையை மாற்றியமைப்பதாக பாஸ் கூறியிருந்தார். கடந்த வாரம் அவசர நிலையை பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக தெருக்களில் ராணுவத்தை இறக்க இது வழிவகுக்கும்.

பொலிவிய ஜனாதிபதித் துறை அமைச்சர் ஜோஸ் லூயிஸ் லூபோ கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஸ் பதவி விலகுவதற்கான எந்த சாத்தியமும் இல்லை என்றும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் ஜனநாயக விரோதமானவை என்றும் கூறினார்.

சுரங்கம், ஹைட்ரோகார்பன்கள், லித்தியம் மற்றும் எரிசக்தி தொடர்பான திட்டங்களில் வெளிநாட்டு தனியார் முதலீட்டிற்கு பொலிவியாவைத் திறப்பதாக உறுதியளித்து பாஸ் ஜனாதிபதியாக உயர்ந்தார். எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வரும் நிலையில் அவர் பதவியேற்றார்.

ஏப்ரல் மாதம் பாஸ் தனது எரிசக்தி அமைச்சரை மாற்றினார்.

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முன்னாள் துணை அமைச்சர் மார்செலோ பிளாங்கோவை அந்தப் பதவிக்கு நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b