Enter your Email Address to subscribe to our newsletters

சித்தூர் , 30 ஜூன் (ஹி.ச.)
சித்தூர் மாவட்டம் ஜீ.டி.நெல்லூரில் மாம்பழ விவசாயிகளுக்கு ஆதரவாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மாம்பழத்திற்கு கிலோவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.17 வழங்க வேண்டும் என வலியுறுத்திய இந்த போராட்டத்திற்கு உம்மடி சித்தூர் மாவட்ட ஒய்.எஸ் .ஆர்.சி.பி தலைவர், முன்னாள் TTD தலைவர் கருணாகர் ரெட்டி தலைமையிட்டார்.
அங்கு கூடியிருந்த கட்சியினர் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தை தடுத்து, அவர்களை அங்கிருந்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய கருணாகர் ரெட்டி,
முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சொந்த மாவட்டத்திலேயே விவசாயிகளின் பிரச்சனைகளை கவனிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
தற்போது ஆட்சியில் உள்ள கூட்டணி அரசு விவசாயிகளுக்கு உரிய ஆதரவு விலை வழங்குவதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கர்நாடக மாநிலத்தில் தோதாபுரி மாம்பழத்தை கிலோ ரூ.17.50 விலையில் சுமார் 1.30 லட்சம் டன் அளவில் மத்திய அரசு கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதேபோல் ஆந்திர மாநில விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் மாம்பழ விலை கிலோ ரூ.25-க்கும் குறையாமல் இருந்ததாகவும், அப்போது விவசாயிகளுக்கு முழு பாதுகாப்பும் நியாயமான விலையும் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
மாம்பழ விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA