Enter your Email Address to subscribe to our newsletters

ரஷ்யா, 05 ஜூன் (ஹி.ச.)
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவை மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த, கூட்டாளி எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
சர்வதேச உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் பேசினார்.
ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கு சில மேற்காசிய நாடுகள் அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக புதின் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழுத்தம் கொடுக்கும் இத்தகைய முயற்சிகள் சர்வதேச உறவுகளுக்கு பாதகம் விளைவிக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இத்தகைய அழுத்தங்களின் தீவிரத்தை உலக நாடுகள் பலவும் தற்போது புரிந்துகொண்டுள்ளன என்றும், இந்தியா தனது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையில் உறுதியாக இருப்பதை ரஷ்யா வரவேற்பதாகவும் புதின் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக நீடிக்கும் மாஸ்கோ-புதுடெல்லி உறவு, பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ரஷ்யா-இந்தியா கூட்டுறவு பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும், இந்த கூட்டாண்மைக்கு எதிரான எந்தவொரு வெளிப்புற அழுத்தமும் பலனளிக்காது என்றும் புதின் திட்டவட்டமாகக் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b