Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லூர் , 08 ஜூன் (ஜி.ச.)
ஜனசேனா கட்சியின் ஒருங்கிணைந்த நெல்லூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அனைத்து நிர்வாகக் குழுக்களையும் கட்சித் தலைவர் பவன் கல்யாண் அதிரடியாக கலைத்துள்ளார்.
மாவட்ட, நகர, மண்டல மற்றும் கிராம அளவிலான அனைத்து குழுக்களும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான கருத்து வேறுபாடுகள், ஒழுக்கக் குறைவு மற்றும் கட்சி விதிகளுக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
“ஒழுக்கம் இல்லாத சூழலில் கட்சியை சீராக நடத்த முடியாது” என்ற அடிப்படையில் இந்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய நிர்வாகக் குழு அமைக்கப்படும் வரை, நெல்லூர் மாவட்ட ஜனசேனா கட்சியின் அனைத்து செயல்பாடுகளும் கட்சியின் மத்திய அலுவலகம் நேரடியாக கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாகவும் இதே காரணங்களால் பிரகாசம் மாவட்டக் குழு கலைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA