தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக டி.கே. அருணா கடும் தாக்கு
ஹைதராபாத் , 08 ஜூன் (ஹி.ச.) பாலமூர்–ரங்காரெட்டி உயர்த்திப்பாசனத் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களில் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு உண்மையான அக்கறை இல்லை என பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் டி.கே. அருணா குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் தனது அறிக்
T


ஹைதராபாத் , 08 ஜூன் (ஹி.ச.)

பாலமூர்–ரங்காரெட்டி உயர்த்திப்பாசனத் திட்டம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்களில் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு உண்மையான அக்கறை இல்லை என பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் டி.கே. அருணா குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது :

முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் (கேசிஆர்) பின்பற்றிய அதே பாதையில்தான் ரேவந்த் ரெட்டியும் செல்வதாகவும், அதனால் கேசிஆருக்கு ஏற்பட்ட அரசியல் நிலைமை போலவே ரேவந்த் ரெட்டிக்கும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும் பாலமூர் திட்டங்களை நிறைவேற்ற முடியாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், பாலமூர்–ரங்காரெட்டி திட்டத்திற்கு தேசிய அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதற்கு மத்திய அரசை குற்றம்சாட்டுவது தவறு எனவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தெலங்கானா எல்லைக்குள் கூட வரவிடமாட்டோம் என ரேவந்த் ரெட்டி கூறியதற்கு டி.கே. அருணா கடும் கண்டனம் தெரிவித்தார்.

“தெலங்கானா என்ன ரேவந்த் ரெட்டியின் சொத்தா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

ரேவந்த் ரெட்டி மக்களிடையே செல்ல முடியாமல் அதிக பாதுகாப்புடன் செயல்படுகிறார் என்றும், காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்கள் மனநிலை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் நிலை உருவாகும் எனவும் டி.கே. அருணா நம்பிக்கை தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA