Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா , 01 ஜூலை (ஹி.ச.)
ஆந்திர மாநில அரசியல் களத்தில் தலைநகர் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி, வரவிருக்கும் தேர்தல்கள் “மாவிகன் vs அமராவதி” என்ற நிலைப்பாட்டில் தான் நடைபெறும் என தெரிவித்தார்.
தாடேபள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் :
தங்கள் அரசு “மாவிகன்” திட்டத்திற்கு முழுமையாக உறுதியாக இருப்பதாக கூறினார். இந்த திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் அனைவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அமராவதிக்கு தாங்கள் எதிராக இல்லை எனவும், ஆனால் அந்த பெயரில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை மட்டுமே தாங்கள் விமர்சிப்பதாகவும் ஜெகன் விளக்கம் அளித்தார்.
ஊழல் இல்லாத தலைநகரை உருவாக்குவதே தங்களின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.
மேலும், “மாவிகன்” திட்டம் வரும் தேர்தல் அறிக்கையிலும் சேர்க்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் தலைநகர் விவகாரம் அரசியல் ரீதியாக மேலும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA