நீட், CUET போன்ற நுழைவுத்தேர்வுகள் மாநில சுயாட்சியை பாதிக்கின்றன - மாணிக்கம் தாகூர் விமர்சனம்
தமிழ்நாடு, 10 ஜூலை (ஹி.ச.) நீட் (NEET), சியுஇடி (CUET) உள்ளிட்ட மத்தியதர நுழைவுத்தேர்வுகள் மாநிலங்களின் கல்வி உரிமைகளையும், மாணவர்களின் நலனையும் பாதிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர
மாணிக்கம்


தமிழ்நாடு, 10 ஜூலை (ஹி.ச.)

நீட் (NEET), சியுஇடி (CUET) உள்ளிட்ட மத்தியதர நுழைவுத்தேர்வுகள் மாநிலங்களின் கல்வி உரிமைகளையும், மாணவர்களின் நலனையும் பாதிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே. அசோக் வர்தன் ஷெட்டி எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி, மூன்று மணி நேர நுழைவுத்தேர்வு மட்டும் ஒரு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோ பொதுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை விட பள்ளி GPA மதிப்பெண்களே மாணவர்களின் கல்லூரி வெற்றியை கணிப்பதில் நான்கு மடங்கு துல்லியமானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒற்றைச் சாளர நுழைவுத்தேர்வு முறை மாநில கல்வி வாரியங்களின் அதிகாரத்தை பறிப்பதுடன், அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்து, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 89 வினாத்தாள் கசிவு சம்பவங்களும், 48 மறுதேர்வுகளும் நடைபெற்றதால் 6.5 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் 40 சதவீதம் வரை கல்விக்காக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் தற்போதைய கல்வி முறையை மாற்றவும், மாநில சுயாட்சியை உறுதி செய்யும் மாணவர் மையக் கல்வி முறையை நடைமுறைப்படுத்தவும் காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P