வாளையார் சோதனைச் சாவடியில் ஆவணமற்ற 700 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல்
கோவை, 11 ஜூலை (ஹி.ச.) கோவை மாவட்டம், பேரூர் துணைப் பிரிவில் உள்ள கே.ஜி. சாவடி காவல் நிலைய எல்லைக்கு உடட்பட்ட வாளையார் சோதனைச் சாவடியில், நடத்தப்பட்ட வழக்கமான வாகனச் சோதனையின் போது, பாலக்காட்டில் இருந்து கோவைக்கு சென்று கொண்டு இருந்த கேரள மாநில சால
Valaiyar


கோவை, 11 ஜூலை (ஹி.ச.)

கோவை மாவட்டம், பேரூர் துணைப் பிரிவில் உள்ள கே.ஜி. சாவடி காவல் நிலைய எல்லைக்கு உடட்பட்ட வாளையார் சோதனைச் சாவடியில், நடத்தப்பட்ட வழக்கமான வாகனச் சோதனையின் போது, பாலக்காட்டில் இருந்து கோவைக்கு சென்று கொண்டு இருந்த கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (KSRTC) பேருந்து ஒன்றை காவல்துறையினர் இடைமறித்தனர்.

பின்னர் நடத்திய சோதனையின் போது, கேரளா, திருச்சூர் மாவட்டம், வரவூர், கொட்டுப்புரத்துவில் வசிக்கும் அபுபக்கரின் மகன் முகமது (65) என்பவரிடம், சுமார் 700 கிராம் எடை உள்ள மூன்று உருக்கிய தங்கக் கட்டிகளும், இரண்டு தங்க வளையல்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்தத் தங்கப் பொருட்கள் ஒரு வெள்ளை உறையில் சுற்றப்பட்டு அவரது சட்டைப்பையில் வைக்கப்பட்டு இருந்தன.

முதற்கட்ட விசாரணையில், முகமதுவின் மகன் நஜ்முதீன் (35), கேரளாவின் திருச்சூரில் ஒரு சிறிய நகை பட்டறையை நடத்தி வருவதும், அந்தப் பட்டறையில் உருக்கப்பட்ட பழைய நகைகளை கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் தங்கப் பொருட்களும் தெரியவந்து உள்ளது.

தங்கப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான சரியான ஆவணங்களை அந்த நபர் சமர்ப்பிக்கத் தவறியதால், மேலும் விசாரணைக்காக காவல் துறையினர் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வருமான வரித்துறை ஆய்வாளர் சத்யராஜிடம் ஒப்படைக்கப்பட்டன.

தீவிரப்படுத்தப்பட்ட வாகனச் சோதனை நடவடிக்கைகளின் போது, மதுக்கரை காவல் நிலையத்தின் உதவி சுரேஷ் மற்றும் வளையார் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல்துறைக் குழுவினரால் இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN