Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 11 ஜூலை (ஹி.ச.)
மாவீரர் அழகு முத்துக்கோனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும் என நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது ;
மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளில், தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பணித்த அவரது வீரத்தையும், அசைக்க முடியாத மனஉறுதியையும் மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.
காலம் கடந்தாலும் அவரது தியாகமும், விடுதலை உணர்வும் தலைமுறைகளுக்கு என்றென்றும் ஊக்கமாக நிற்கும்.
தமிழர் வீர வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாவீரர் அழகு முத்துக்கோனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.
அவரது உயரிய இலட்சியங்களும் தன்னலமற்ற தியாகமும் நம் சமூகத்திற்கு வழிகாட்டும் ஒளியாக விளங்கட்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam