காளேஸ்வரம் பேரேஜ் கதவுகளை மூடினால் பெரும் ஆபத்து - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை
ஐதராபாத் , 12 ஜூலை (ஹி.ச.) காளேஸ்வரம் திட்டத்தில் உள்ள பேரேஜ்களின் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கதவுகளை மூடக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் பேரேஜ்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்
A


ஐதராபாத் , 12 ஜூலை (ஹி.ச.)

காளேஸ்வரம் திட்டத்தில் உள்ள பேரேஜ்களின் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கதவுகளை மூடக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் பேரேஜ்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் :

காளேஸ்வரம் திட்டத்தில் மேடிகட்டா பேரேஜ் முக்கிய அங்கமாக விளங்குகிறது என்றும், ஸ்ரீபாத யெல்லம்பள்ளி திட்டம் திட்டத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

காளேஸ்வரம் பேரேஜ்களின் பாதுகாப்பு தொடர்பாக தேசிய அணை பாதுகாப்பு ஆணைய நிபுணர் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

நிபுணர்கள் அளித்துள்ள அறிவுரைகளை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

சீரமைப்பு பணிகள் முடிவடைவதற்கு முன்பே பேரேஜ் கதவுகளை மூடி தண்ணீரை தேக்கினால், கட்டுமானங்களில் பாதிப்பு ஏற்பட்டு பேரேஜ்கள் சேதமடையும் அபாயம் உள்ளது.

எனவே, பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக உறுதி செய்யப்பட்ட பிறகே நீர் சேமிப்பு மற்றும் பம்பிங் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ரேவந்த் ரெட்டி கூறினார்.

கண்ணேபள்ளி பம்ப் ஹவுஸ் மூலம் தண்ணீரை உயர்த்துவதற்கு மேடிகட்டாவில் போதுமான அளவு நீர் இருப்பு தேவைப்படுவதாகவும், ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் நிபுணர்களின் ஆலோசனையின் பேரிலேயே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

காளேஸ்வரம் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைக்கு முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல் மற்றும் திட்டமிடல் குறைபாடுகளே காரணம் என முதல்-மந்திரி குற்றம்சாட்டினார்.

கட்டுமான பணிகளின் போது ஏற்பட்ட சவால்கள் குறித்து பொறியாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மக்களின் பாதுகாப்பையும் அரசின் வளங்களையும் கருத்தில் கொண்டு, நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் காளேஸ்வரம் திட்டம் மீண்டும் சீரமைக்கப்படும் என்று ரேவந்த் ரெட்டி உறுதி அளித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA