Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்குடி, 13 ஜூலை (ஹி.ச.)
காரைக்குடி பகுதியில் மூன்றரை வயதுடைய பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 45 வயதான சங்கரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சங்கரன் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனை உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து 1098 குழந்தைகள் உதவி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b