ஆதிலாபாத் சிமெண்ட் ஆலை மீட்பு கோரி குமாரசாமியிடம் பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கே.டி.ஆர். கோரிக்கை
ஐதராபாத் , 15 ஜூலை (ஹி.ச.) ஆதிலாபாத் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (CCI) தொழிற்சாலையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமியை சந்திக்க பிஆர்
A


ஐதராபாத் , 15 ஜூலை (ஹி.ச.)

ஆதிலாபாத் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (CCI) தொழிற்சாலையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமியை சந்திக்க பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். தலைமையிலான குழு டெல்லி புறப்பட்டுச் சென்றது.

இந்த குழுவினர் குமாரசாமியை சந்தித்து, CCI தொழிற்சாலையை புனரமைத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

கே.டி.ஆர். உடன் ராஜ்யசபா உறுப்பினர் வத்தீராஜு ரவிச்சந்திரா, முன்னாள் அமைச்சர் ஜோகு ராமண்ணா, கானாபூர் தொகுதி பொறுப்பாளர் ஜான்சன் நாயக் மற்றும் CCI சாதன சமிதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

குமாரசாமியுடனான சந்திப்புக்குப் பின்னர் கே.டி.ஆர். செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.

அப்போது தெலங்கானாவில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை என அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிலாபாத் CCI சிமெண்ட் தொழிற்சாலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தால், அப்பகுதி இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்று பிஆர்எஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA