ஜகந்நாதர் அருளால் நாடு முழுவதும் சுபிட்சம் நிலவ வேண்டும் - பவன் கல்யாண்
அமராவதி , 16 ஜூலை (ஹி.ச.) பூரி ஜகந்நாதரின் புனித ரத யாத்திரையை முன்னிட்டு ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜகந்நாதர
A


அமராவதி , 16 ஜூலை (ஹி.ச.)

பூரி ஜகந்நாதரின் புனித ரத யாத்திரையை முன்னிட்டு ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

ஜகந்நாதரின் அருளால் நாடு முழுவதும் அமைதி, வளம் மற்றும் சுபிட்சம் நிலவ வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இறைவனின் ஆசீர்வாதம் நிறைந்து, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பூரி ஜகந்நாதரின் ரத யாத்திரை என்பது வெறும் விழா மட்டுமல்ல என்றும், அது ஆழ்ந்த நம்பிக்கை, பக்தி மற்றும் இறைவனுக்கும் பக்தர்களுக்கும் இடையிலான ஆன்மிக பந்தத்தின் வெளிப்பாடு என்றும் பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.

ஜகந்நாத சுவாமி, பலபத்ர சுவாமி மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் புனித ரதங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த நன்னாளில், அவர்களின் தெய்வீக ஆசீர்வாதம் ஒவ்வொருவரின் இதயத்திலும் அமைதியையும், குடும்பங்களில் மன வலிமையையும், வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கலியுக தெய்வமான ஜகந்நாதர் அனைவரையும் தர்மத்தின் பாதையில் வழிநடத்தி, வீடுகளில் சுகம், சந்தோஷம் மற்றும் வளத்தை பெருக்க வேண்டும் என்றும், சமூகத்திற்கு பணிவுடனும் தூய்மையான பக்தியுடனும் சேவை செய்ய தேவையான அறிவையும் தைரியத்தையும் வழங்க வேண்டும் என்றும் பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA