பிரம்மம் சவுத்ரி விரைவில் குணமடைய வேண்டும் - அமைச்சர் நாரா லோகேஷ்
தாடேப்பள்ளி , 16 ஜூலை (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச கம்மா கார்ப்பரேஷன் தலைவர் நாதெண்ட்லா பிரம்மம் சவுத்ரி, திடீரென ஏற்பட்ட மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தாடேப்பள்ளியில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்
A


தாடேப்பள்ளி , 16 ஜூலை (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச கம்மா கார்ப்பரேஷன் தலைவர் நாதெண்ட்லா பிரம்மம் சவுத்ரி, திடீரென ஏற்பட்ட மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தாடேப்பள்ளியில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை குறித்து அறிந்த அமைச்சர் நாரா லோகேஷ், பிரம்மம் சவுத்ரி விரைவில் குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பிரம்மம் சவுத்ரி மற்றும் கௌதமி ஸ்வேதா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

திருமணமான சில நாட்களிலேயே அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், பிரம்மம் சவுத்ரியின் மனைவி கௌதமி ஸ்வேதாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்ததாகவும், தைரியமாக இருக்கும்படி கூறியதாகவும் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

மணிப்பால் மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசி பிரம்மம் சவுத்ரியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், அவர் விரைவில் குணமடையும் வகையில் சிறந்த சிகிச்சை அளிக்கவும், தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கவும் மருத்துவக் குழுவினரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA