Enter your Email Address to subscribe to our newsletters

தெலங்கானா, 16 ஜூலை (ஹி.ச.)
தெலங்கானாவில் வரவிருக்கும் ஆதிலாபாத் மற்றும் வரங்கல் விமான நிலையங்களுக்காக பெருமை கோரும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு தெலங்கானா பாஜக தலைவர் என். ராமச்சந்தர் ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிப் பணிகள் வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்கான பெருமையை முதல்வர் கோருவது தவறு என்று அவர் இன்று குற்றம்சாட்டினார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்தர் ராவ் கூறுகையில்,
வளர்ச்சியைப் பொறுத்தவரை தவறு ஒன்றும் இல்லை. ஆனால் தன்னால் தான் விமான நிலையம் வந்தது என்று அவர் பெருமை கோருவது தான் தவறு.
கேசிஆர் முதலமைச்சராக இருந்தபோது, விமான நிலையத்தை பயணிகள் பயன்பாட்டிற்கு மாற்றுவதற்காக நிலம் வழங்குமாறு கேட்கப்பட்டது. ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
நரேந்திர மோடியின் உதான் மற்றும் பிற இணைப்புத் திட்டங்களின் கொள்கைகளால் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் 75க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மற்றும் அதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளின் கீழ் 65 ஆண்டுகளில் 70 விமான நிலையங்கள் மட்டுமே கட்டப்பட்டன. இன்று நம்மிடம் 150க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன.
மாநில அரசு விரைவாக நிலத்தை கையகப்படுத்தினால், வரங்கலில் நிச்சயமாக ஒரு சிறந்த விமான நிலையம் உருவாகும்.
இது நரேந்திர மோடி மற்றும் அவரது அரசு எடுத்த நடவடிக்கைகளால் தான் சாத்தியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b