Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 ஜூலை (ஹி.ச.)
இந்தியாவின் முதல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சுற்றுப்பாதை ஏவுகலமான விக்ரம்-1-ன் முதல் ஏவுதல் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு கட்டங்களைக் கொண்ட விக்ரம்-1 ஏவுகலம், விரைவான மற்றும் தேவைக்கேற்ப செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி, இந்திய இளைஞர்களின் திறமை, உறுதிப்பாடு மற்றும் தொழில்முனைவு உணர்வை வெளிப்படுத்துவதாகவும், விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் புதுமை மற்றும் தொழில்முனைவுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதை எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும், விக்ரம்-1 ஏவுதல் வெற்றியடைய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் முழுக் குழுவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இந்த வரலாற்று நிகழ்வை அனைத்து இந்தியர்களும், குறிப்பாக இளைஞர்களும் பின்தொடர்ந்து, #IndiaWithVikram1 என்ற ஹாஷ்டேக்கைப் பயன்படுத்தி ஸ்கைரூட் குழுவுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P