72-வது தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து
அமராவதி , 19 ஜூலை (ஹி.ச.) 72-வது தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இதில் விருது பெற்ற கலைஞர்களுக்கு ஆந்திர முதல்-மந்திரி நாரா சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிர
A


அமராவதி , 19 ஜூலை (ஹி.ச.)

72-வது தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.

இதில் விருது பெற்ற கலைஞர்களுக்கு ஆந்திர முதல்-மந்திரி நாரா சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

தேசிய திரைப்பட விருதுகளை பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

தெலுங்கு திரையுலகம் பெற்றுள்ள இந்த அங்கீகாரம் பெருமைக்குரியதாகும்.

நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறப்பான திறமையால் தெலுங்கு சினிமா தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

கலை, கலாசாரம் மற்றும் சினிமா ஆகியவை நமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய தூண்களாக உள்ளன.

தெலுங்கு சினிமா எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அடைந்து, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது பதிவில் நடிகர்கள் மம்முட்டி, யாமி கவுதம், கார்த்திக் ஆர்யன், நிஹாரிகா கொனிடேலா மற்றும் இயக்குநர் சுகுமார் ஆகியோரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘புஷ்பா 2’, ‘கல்கி 2898 ஏ.டி.’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட திரைப்படங்களையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA