Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜூலை (ஹி.ச.)
அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிலான நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சுயாதீனமான மற்றும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு பொறுப்பு இருப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பக்தர்கள் நம்பிக்கையுடன் வழங்கிய பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட காணிக்கைகள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அறக்கட்டளையின் கணக்குகள் மற்றும் விசாரணை அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடே அதன் நம்பகத்தன்மையை தீர்மானிக்கும் என்றும் ராகுல் காந்தி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P