Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பி.எஸ்சி செவிலியர், பி.ஃபார்ம், பிசியோதெரபி உள்ளிட்ட துணை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் நீட்டித்துள்ளது.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூலை 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது.
மேலும், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கீழ் வரும் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஜூலை 21-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கால நீட்டிப்பு, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர விரும்பும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மாணவர்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க, நீட்டிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.
Hindusthan Samachar / vidya.b