Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 20 ஜூலை (ஹி.ச)
சேலம் மாவட்டத்தின் ஜீவாதாரமான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இரண்டாவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 42 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே அணையின் நீர்மட்டத்தில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று 74.92 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 74.81 அடியாக குறைந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு தற்போது 36.97 டி.எம்.சி.யாக உள்ளது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதே நீர்மட்டம் குறைவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பொதுவாக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதற்கு அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடியாவது இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது நீர்மட்டம் 75 அடிக்குக் கீழ் சரிந்துள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b