Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 21 ஜூலை (ஹி.ச.)
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்ட களத்தில் இருக்கும் இளைஞர்களின் பசியை போக்கும் வகையில், மும்பையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் உணவு விநியோக சேவை மூலம் உணவு ஆர்டர் செய்து அதற்கான பணத்தையும் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து, டெல்லியில் பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் உணவு விநியோக ஊழியர் ஒருவர் உணவுப் பைகளுடன் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து உணவை வழங்கினார்.
தொலைவில் இருந்தபோதும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்த நபர் செய்த இந்த செயல் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA