Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 22 ஜூலை (ஹி.ச)
ஈரானில் நடந்து வரும் போரினால் அமெரிக்காவுக்கு இதுவரை 37.5 பில்லியன் டாலர் செலவாகியுள்ளதாக பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாத நடுப்பகுதியில் 29 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டிருந்த தொகை தற்போது அதிகரித்துள்ளது.
செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழு விசாரணையில் சாட்சியமளித்த போது அவர் இந்தத் தகவலைக் கூறினார். இந்த விசாரணையில் பென்டகனுக்கு கூடுதலாக சுமார் 67 பில்லியன் டாலர் நிதி வழங்கக் கோரும் கோரிக்கையை அவர் நியாயப்படுத்தினார்.
மே மாதத்தில் பென்டகன் அதிகாரிகள் காங்கிரஸிடம் ஈரான் போருக்கு சுமார் 29 பில்லியன் டாலர் செலவாகியுள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால் அந்த மதிப்பீட்டில் அமெரிக்க தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும், பல ஆய்வாளர்கள் அந்தத் தொகை மிகக் குறைவானது என்று மதிப்பிட்டதாகவும் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சட்டமியற்றுபவர்களிடம் சமர்ப்பித்த எழுத்துப்பூர்வ அறிக்கையில், ஈரான் போரின் போது அமெரிக்கப் படைகளால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன ஏவுகணைகள் மற்றும் பிற வெடிபொருட்களை விரைவாக கொள்முதல் செய்வதற்கு 21 பில்லியன் டாலர் தேவை என்று ஹெக்செத் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போர் நடவடிக்கைகளின் போது இழந்த அல்லது சேதமடைந்த உபகரணங்களை மாற்றுவதற்கு 2 பில்லியன் டாலரும், ட்ரோன்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கு 11.6 பில்லியன் டாலரும் பென்டகன் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b